அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே!

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே

ஊர்முன்னே பெண்ணலழகை மணந்தாலும்..

ஊரோரம் உன் மடியிலே எந்நாளும் அடைக்கலம் பெற இன்னொரு அலையாய் வருவேன்.

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே..

காதல் இல்லா கலைப் போல் இவ்வுலகும் வறண்டால்,

காதல் இதுவென்றுக் காட்ட,

உன் சுகம் தேடி வருவேன், அலையாய் வருவேன்.

அலைகள் ஓய்வதில்லை கண்ணிமையே..

கன்னங்களில் வடியும் கண்ணீரும் கடலானால்,

என் ஈரத்தோலை முத்தமிடும் உன் இதழ்களை தேடி நானும் அலையாய் வருவேன்.

அலைகள் ஓய்வதில்லை என் பறக்கும் கனவின் நம்பிக்கை துளிகளே..

Scroll to Top