Na Muthukumar – Return If Possible

இன்னும் ஒரு இரவுஎன்னும் பாடலில், இன்னும் ஒரு இரவை தேடி அலைந்து, “வழிப்போக்கனும் வருவான் போவான், வழிகள் எங்கும் போவதில்லைஎன்று கூறிய கவிஞன் நீ,

அதே போல ஒரு வழிப்போக்கனின் பார்வையிலிருந்து
வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய்……… நீ இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…” என்று காதல் பாடினாய்.

இன்று நீயும் ஒரு வழிப்போக்கனாய், கண் காணாத இடத்திற்குச் சென்று, வழி தொலைந்து விட்டு என்றோ ஒரு நாள், வந்த வழியை பிடித்து திரும்பி வருவாய் என்று நம்புகிறேன். அது வரை, உன் வரிகளில் வழியைத் தேடி யாவரும் ஒரு வழிப்போக்கனாக பயணிப்போம்.

#ReturnIfPossible #NaMuthukumar

Scroll to Top